தேனி, ஆக.27- இலவச தள்ளுவண்டி வாங்க கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,50,000 வட்டி யல்லா கடன் வழங்க கோரி சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலை வர் பி.சுப்புராஜ், பொருளாளர் எஸ்.தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் எஸ்.தங்கவேல், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், எஸ்.சந்தியாகு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.லெனின், விதொச ஒன்றியத் தலைவர் கே.தயாளன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.