சிவகங்கை, மார்ச் 26- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியின் சார் பில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆத ரித்து, வீதி தோறும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட ‘இந்தியா’ கூட்டணி கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்கு திமுக நகர் செயலாளர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். காங்கி ரஸ் நகர்த் தலைவரும் நகர் மன்ற உறுப்பினருமான புரு சோத்தமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், காங்கிரஸ் மாவட்டப் பொறுப்பாளர் ஏ.ஆர்.பி.முருகேசன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் அண்ணாத்துரை, ராஜா மணி, இளைஞர் அணி செய லாளர் மயில்வாகனன், மதி முக நகர் செயலாளர் பொறி யாளர் கண்ணன், ஒன்றியச் செயலாளர் அசோக், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆண்டி, ஒன்றியக் குழு உறுப்பினர் கள் பரமாத்மா, காசிராஜன், சிபிஐ முன்னாள் எம்எல்ஏ தங்கமணி, ஒன்றியச் செய லாளர் சங்கையா, நகர் செய லாளர் நாகராஜன், விசிக செல்வராஜ், சோமசுந்தர பாரதி, தேவதாஸ், நகர்மன் றத் துணைத் தலைவர் பால சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.