சிவகங்கை. மார்ச் 8- தமிழகம் முழுவதும் விழித்தெழு திரைப்படம் 105 திரையரங்குகளில் வெளி யாகி, மக்களின் வரவேற்பை பெற்றுள்ளதாக திரைப்பட தயாரிப்பாளரும் திரைப் படத்தில் நடித்தவருமான சிவகங்கை நகர்மன்ற தலை வர் துரை ஆனந்த் தெரிவித்தார். சிவகங்கையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதா வது: ஆன்லைன் மோசடி யால் பாதிக்கப்பட்டு குடும் பங்கள் வீதிக்கு வந்த அவல நிலையை எடுத்துரைப்ப தாக இப்படம் உள்ளது. ஆன் லைன் மோசடியால் இறப்பு சம்பவங்கள் நிக ழ்ந்து கொண்டேயிருக்கின் றன. இதனால் தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் ஆன் லைன் மோசடிக்கு எதிராக சட்ட மசோதா கொண்டுவந் தார். இந்த மசோதா ஆளுநர் கையெழுத்திடாமல் கிடப் பில் கிடக்கிறது. இப் படத்தை பார்க்கும் தமிழ் மக்கள் ஆளு நருக்கு எதிராக கொந்தளிப் பார்கள் என்கிற நம்பிக்கை உள்ளதாக பொறியாளர் ஹரி கூறினார். தமிழக முழு வதும் ஆன்லைன் மோசடி யால் அன்றாடம் குடும்பங் கள் வீதிக்கு வருவது நடந்து கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாகவே இது போன்ற ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய் தேன். இந்த படம் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் தமிழ்ச்செல்வன் சிறப்பான முறையில் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் நல்ல விளைவுகளை தமிழ கம் முழுவதும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது வரைக்கும் மூன்று திரைப்படங்களில் நடித்தி ருக்கிறேன் .மேலும் இரண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு துரை ஆனந்த் தெரிவித்தார்.