districts

img

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

பெரம்பலூர், மே 29 - தமிழகத்தில் சாதி ஆணவக் கொலை களை தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலை யம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் எம்.கருணாநிதி தலைமை வகித்தார். சிபிஎம் நகர செயலா ளர் எஸ்.சிவானந்தம், ஒன்றியச் செயலாளர் கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், சிஐடியு மாவட்ட செய லாளர் எஸ்.அகஸ்டின், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் முகமதுஇலியாஸ் அலி, தீஒமு சட்ட ஆலோசகர் ப.காமராசு,  தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் அ.குத ரத்துல்லா, மாவட்ட செயலாளர் வி.பி.சீனி வாசன், திராவிடர் கழகம் என்.ஆறுமுகம், கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்தி ரன், தீஒமு மாவட்ட நிர்வாகிகள் அ.கலையரசி  மற்றும் பி.கிருஷ்ணசாமி கலந்து கொண்டனர்.