பெரம்பலூர், ஜன.9 - கொரோனா பெந்தொற்றின் மூன்றாம் அலை துவங்கியிருப்பதால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. அதனொரு பகுதியாக ஞாயிறன்று தமிழகம் முழுவதும் முழு ஊர டங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி னர் .டெல்டா மாவட்டங்களின் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்ப லூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் உள்பட அனைத்து தாலுகாவிலுள்ள கடை களும் அடைக்கப்பட்டன. பெரம்பலூர் நகர்ப்பகுதியில் காமராஜ் வளைவு மற்றும் பாலக்கரை, நான்குரோடு பகுதியில் பேரி கார்டு அமைத்து போலீசார் தீவிர சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்த ரவை மீறி உரிய காரணமின்றி சென்றவர் கள் மீது வழக்கு பதிந்து வாகனத்தை பறி முதல் செய்தனர்.
மயிலாடுதுறை
முழு ஊரடங்கால் மயிலாடுதுறை மாவட் டத்தில் தரங்கம்பாடியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தரங்கம்பாடியின் வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டை, 300 ஆண்டுகள் பழமை யான புதிய எருசலேம் தேவாலயம் ஆகி யவை மூடப்பட்டன. சுற்றுலா பயணி களின்றி கடற்கரை வெறிச்சோடிக் காணப் பட்டது. தரங்கம்பாடி, செம்பனார்கோவில், ஆக்கூர், பெரம்பூர், திருக்கடையூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பொதுமக்கள் நட மாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
குடவாசல்
குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலை யம், அத்திக்கடை, செக்போஸ்ட் மற்றும் ஓகை பகுதியில் குடவாசல் காவல் ஆய்வா ளர் கருணாநிதி தலைமையில், 3 இடங்க ளில் தடுப்பு நடவடிக்கையாக காவலர்கள் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கி நகர் பகுதியில் சுமார் இரண்டாயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் பணி மனையில் நிறுத்தப்பட்டுள்ளன. கடைவீதி கள் மற்றும் பேருந்து நிலையம், முக்கிய வீதி கள் வெறிச்சோடி காணப்பட்டன. காவல் துறையினர் ஆங்காங்கே சோதனைச் சாவடி அமைத்து அவசியமின்றி வெளியே செல்பவர்களை எச்சரித்து அனுப்பினர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கட்டுமா வடி கிழக்கு கடற்கரை அருகே நாட்டுப்பட கில் பிடித்து வரப்படும் மீன்கள் ஏலக்கடை வெறிச்சோடி காணப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமை யில் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோ ணம் ஆகிய மூன்று கோட்டங்களிலும் உள்ள சுமார் 45 ஆயிரம் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச் சோடி காணப்பட்டன. தஞ்சாவூர், கும்பகோ