பெரம்பலூர், ஏப் 9- பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் ஒலிம்பியாட் எனும் பள்ளி மாணவர்களுக்கான திறனறித் தேர்வு ஞாயி றன்று நடைபெற்றது. 2-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முன் பதிவு செய்து தேர்வில் பங்கேற்றனர். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார், பள்ளி முதல்வர் ஹேமா, தேசிய பாரா ஒலிம்பிக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் மக்கள் ராஜன் ஆகியோர் தேர்வு மையத்தை ஆய்வு செய்தனர். தேர்வில் 95 சதவீதம் மதிப்பென் பெறும் முதல் நப ருக்கு ஆண்ட்ராய்டு எல்இடி டிவியும், வகுப்பு வாரி யாக முதல் மதிப்பெண் பெறுபவருக்கு டிக்ஸ்னரியும், இரண்டாம் வகுப்பு முதல் 5-ஆஆம் வகுப்பு வரை முதல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஸபோர்ட்ஸ் வாட்ச், பரிசாக வழங்கப்படும். பரிசுகள் ஏப்.16-ஆம் தேதி பள்ளிவளாகத்தில் வழங்கப்படும். தேர்விற்கு குழந்தைகளை அழைத்து வந்திருந்த பெற்றோர்களுக் கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி துணைத்தலைவர் சி.மோகனசுந்தரம், சங்கீதா கோபி நாத் துணைமுதல்வர் சந்திரா ஆசிரியர்கள் சந்திரோ தயம், ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.