பெரம்பலூர், டிச.29- அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் வருடந்தோறும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மூன்று நாட்கள் கேக் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கேக் திருவிழா டிசம்பர் 29 அன்று தொடங்கியது. பெரம்பலூர் புதியபேருந்து நிலையம் அருகே உள்ள அஸ்வின் பார்ட்டி ஹாலில் நடைபெற்ற கேக் திருவிழாவை அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் கே.ஆர்.வி.கணேசன் தொடங்கி வைத்தார். அஸ்வின்ஸ் இயக்குநர்கள் செல்வக்குமாரிகணேசன், அஸ்வின், சிபி,நிஷாசிபி ஆகியோர் முன்னிலை வகித்த னர். தொழிலதிபர்கள் வள்ளலார் அரவிந்தன், ரெட்கிராஸ் ஜெயராமன், ரோட்டரி கவர்னர் கே.என்.ஜெ.கார்த்தி, ஆதவ் ஸ்கூல் ராஜேந்திரன், முன்னாள் நகராட்சிதுணைத் தலைவர் மோகன்ராஜ் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அஸ்வின்ஸ் மேலாளர் சுரேஷ், நேர்முக உதவியாளர் சூரி என்கிற வெங்கடே சன், ஹெச்ஆர் சரவணண் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.