பெரம்பலூர், நவ.2 - பெரம்பலூரில் மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பாக மை பாரத் நிறைவு விழாவின் ஒரு கட்டமாக, ‘தீபாவளியுடன் எனது பாரதம்’ எனும் தலைப்பில் தூய்மை பணி மேற்கொள்ளப் பட்டது. பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளா கத்தில் தூய்மைப் பணி நிகழ்ச்சியை நேரு யுவகேந்திராவின் பெரம்பலூர் மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா தொடங்கி வைத்தார். நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் விநாயகம் முன்னிலையில், பெரம்பலூர் மார்க்கெட் பகுதியில் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள், இளைஞர் மன்ற உறுப்பி னர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மைப் பணி மேற்கொண்டனர். இதில் இந்தோ டிரஸ்ட் மேலாளர் செல்வக்குமார், ஹோப் டிரஸ்ட் இயக்குநர் திவ்யா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.