பெரம்பலூர், ஜூலை 23 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட 8 ஆவது மாநாடு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சனிக் கிழமை நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி பி.சின்ன பொண்ணு தலைமை வகித்தார். முன்ன தாக ஒன்றிய தலைவர் ஷர்மிளாபேகம் வரவேற்றார். உறுப்பினர் ஜெயலட்சுமி கொடியேற்றி துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் கே.தமிழ்செல்வி துவக்க உரையாற்றினார். மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் அ.கலை யரசி வேலை அறிக்கை வாசித்தார். மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா சிறப்புரையாற்றினார். பெட்ரோல், டீசல், கேஸ், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கி நகர்ப்புற மக்களுக் கும் வேலையை உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தை கள் மீதான பாலியல் வன்கொடுமை களை தடுத்திட வேண்டும். பெண்களுக் கான திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் திட்டத்தினை முடக்கா மல் மீண்டும் அமல்படுத்த வேண்டும். ரேசன் கடைகளில் தரமான பொருட் கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்பை மாவட்ட நிர்வாகம் உடனடி யாக உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் 15 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தலைவராக எம்.மகேஸ்வரி, செயலாள ராக பி.சின்னபொண்ணு, பொருளாள ராக ஷர்மிளாபேகம், துணைத் தலைவ ராக வெண்மணி, துணைச் செயலாள ராக சாந்தி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். ஒன்றியச் செயலாளர் எம்.மகேஸ்வரி நன்றி கூறினார்.