பெரம்பலூர், ஜூன் 5 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு மற்றும் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பெரம்பலூர் துறைமங்க லத்திலுள்ள சிஐடியு அலுவலகத்தில் கருத்த ரங்கம் நடைபெற்றது. வட்ட தலைவர்கள் எஸ்.அகஸ்டின், சிஐடியு டி.எஸ்.சம்பத் ஆகி யோர் தலைமை வகித்தனர். வட்ட செயலா ளர் எம்.பன்னீர்செல்வம், ரெ.இராஜகுமாரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்ரமணியன் மின் ஊழி யர் மத்திய அமைப்பு எஸ்.இராஜாராமன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மின்வாரி யம் பொதுத்துறையாகவே நீடித்திட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமலாக்க வேண்டும். 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். முறையான மருத்துவ காப்பீட்டு திட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த பணிக்காலத்தை இணைத்து ஓய்வூதியம் கணக்கீடு செய்திட வேண்டும். 2003-க்கு பிறகு பணி நிரந்தர வேலையில் சேர்ந்தவர்களுக்கும் பென்சன் கிடைத்திட வேண்டும். மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு எதிரான எண் 2/12.4. 2022 எண்ணிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கருத்தரங்கத்தில் முன் வைக்கப்பட்டன.