பெரம்பலூர், நவ.18 - பெரம்பலூரைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று நூத்தப்பூரைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன் என்பவர் கட்டாய திருமணம் செய்தபோது, சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கடும் நடவ டிக்கை எடுத்து இருந்தால் சிறுமி உயிரி ழப்பை தவிர்த்திருக்கலாம். எனவே, உரிய நடவடிக்கை எடுக்காத கை.களத்தூர் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மணிகண்டன் குடும்பத்தினர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்ய வேண்டும். சிறுமியின் குடும்பத்தின ருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூரில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில செயலாளர் சிங்காரவே லன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் லெனின், மாநில பொருளாளர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சின்னபொன்னு, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் கருணைக் கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியாவிடம் கோரிக் கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.