பெரம்பலூர், மே 9 - மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பது தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் அடிப்படை சேவைகளில் ஒன்றாக, மக்கள் தங்களது குறைகளை உரிய அலுவலர்களை அணுகி தெரிவிக்கும் நாளாகும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடை பெறுகிறது. அன்று அனைத்து அரசு அலுவலகங்களி லும் அந்தந்த பகுதிகளில் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். அங்கு குறை களை மனுக்களாக கொடுத்து நடடிவக்கை எடுக்காதபட்சத்தில் சில அதிகாரிகள் மக்கள் சாசனத்திற்கு எதிராக கையூட்டு பெற்று ஏதோ ஒரு காரணம் சொல்லி அலைக்கழிக்க லாம். அதனை உயர் அதிகாரியும், மாவட்ட நிர்வாக நடுவருமான ஆட்சியரிடம் மனு கொடுத்து கோரிக்கைகளை தெரிவிப்பது வழக்கம். குறைதீர் முகாம் காலை 10 மணிக்கே அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கும்.
அதிகாரிகள் வந்து உரிய காலத்தில் மனுக் களை பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் தெரிவிப்பர். மனுதாரர் முன்கூட்டியே மனு கொடுத் திருந்தால், அதற்கான விளக்கம் அல்லது புதிதாக மனு கொடுத்தால், அதற்கு உரிய நட வடிக்கை ஒரு குறிப்பிட்ட காலத்தில் எடுப்பதாக தெரிவிப்பார். ஆனால், பெரம்ப லூர் ஆட்சியர் அலுவலகத்தில், உரிய காலத் தில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பணிக்கு வராததால், பொதுமக்கள் தங்களது மனுக் களை கொடுக்க காத்திருந்தனர். நேரம் கடந்ததே தவிர, அதிகாரிகள் உரிய காலத் தில் வரவில்லை. தாசில்தார்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் இதர துறைவாரியான அதி காரிகளும், பொதுமக்களோடு காத்துக் கிடந்த னர். 10 மணிக்கு வாங்க வேண்டிய மனுக்களை, பெரம்பலூர் ஆட்சியர் உள்பட அனைத்து உயர் அதிகாரிகளும் வேண்டா வெறுப்பாக சுமார் 11 மணிக்கு மனுக்களை வாங்க வந்த தால், பொதுமக்களின் கூட்டம் குறைந்தது. ஓரிரு நிமிடங்கள் மனுதாரர்கள் தாமதமாக வந்தால், ‘அடுத்த திங்கட்கிழமை வாங்க’ எனக்கூறும் அதிகாரிகள் உரிய நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆட்சியர் வெங்கடபிரியா உள்பட அனைத்துத் துறை உயர் அதிகாரிகளும், உரிய நேரத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் மக்களை காக்க வைக்காமல் மனுக்களை பெற வேண்டும். மனு வாங்க ஆர்வமில்லாத அதிகாரிகள், கூட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு விடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.