பெரம்பலூர், ஆக.31 - விலைவாசி உயர்வு, வேலை யின்மையை கருத்தில் கொண்டு சமீபத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி விவ சாயத் தொழிலாளர்களுக்கான கூலியை உயர்த்திட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் நூறு நாள் வேலையை 200 நாட்களாக அதிகரித்து, தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இத்திட்டத்தை பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், பூலாம்பாடி மற்றும் லப்பை குடிக்காடு உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளி லும் தொடங்க வேண்டும். 55 வயதை கடந்த அனைத்து முதியோர்களுக்கும் ரூ.5 ஆயி ரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2022 மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்துக்கு விதொச மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் பி.ரமேஷ், விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் கலையரசி, துணை செயலாளர் ஆர். கோகுலகிருஷ்ணன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கநாதன், சிபிஎம் நகர செயலாளர் சிவானந்தம் உள்ளிட்டோர் விளக்கவுரை ஆற்றினர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநி லச் செயலாளர் பக்கிரிசாமி ஆர்ப்பாட்ட உரை யாற்றினார்.