districts

போலீசாரிடம் சிக்கிய மான் வேட்டை கும்பல்

பெரம்பலூர், ஜன.22 - பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமப் புற பகுதிகளில் வீடு மற்றும் பட்டிகளில் கட்டப் பட்டு இருக்கும் ஆடுகள் களவு போவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.  இதனால் சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையிலான எஸ்.எஸ்.ஐ-க்கள் சிவக்குமார்,  ரமேஷ், மணிகண்டன் மற்றும் போலீசாரை உள்ளடக்கி தனிப்படை  அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் ஜன.21 இரவு வழக்கம் போல், ஆடு திரு டர்களை பிடிக்க தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது, ஜன.22 அன்று காலை சுமார் 6  மணியளவில், பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தில் டாட்டா மேஜிக் வேன் ஒன்று வேகமாக சென்றது. அதனை விரட்டி  பிடித்து சோதனையிட்டதில் 3 வயது மதிக்கத் தக்க ஆண் மான், 8 மாதம் உள்ள ஆண் மான், 2 வயதுள்ள பெண் மான் ஒன்று என 3  மான்களும், 2 கள்ளத் துப்பாக்கிகளும் இருந்தன. பின்னர், வேனில் வந்த நபர் களை பிடித்து விசாரித்த போது, வேட்டை மணி (எ) மணிகண்டன் (24), ராமச்சந்திரன் (30), வெள்ளனூரை சேர்ந்த கோவிந்தன் (33),  கார்த்திக் (19), 17 வயது சிறுவன்  என 5  பேரிடம் விசாரணை நடத்தினர்.  மான்களை திருச்சி மாவட்டம், எதுமலை  வனப் பகுதியில் வேட்டையாடி வந்தது தெரியவந்தது.  மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேட்டையாடி மானின் கறியை சாப்பிட்டும், விற்றும் வந்தது தெரிந்தது. குற்றப்பிரிவு போலீசார்,  மான்கள், வேன் மற்றும் துப்பாக்கிகளை திருச்சி வனத்துறையினரை வரவழைத்து,  பெரம்பலூர் வன அலுவலகத்தில் ஒப்படைத் தனர். இவர்கள் கோனேரிப்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் ஆடு திருடுவதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.