districts

ஓய்வு பெற்றவர்களுக்கு பணி:   புதுவை அரசுக்கு வாலிபர்கள் எதிர்ப்பு

புதுச்சேரி, மார்ச் 3- மின் துறையில் ஓய்வு பெற்றவர்களை பணி அமர்த்து வதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாநிலத் தலைவர் கவுசிகன், செயலாளர் ஆனந்த் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவ தற்கான அறிவிப்புகள் கடந்த 5 மாதத்திற்கு முன்பு வெளி யிடப்பட்டது. எல்டிசி, யுடிசி, காவலர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளி யிடப்பட்ட நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் எழுத்து தேர்வு நடத்தப்படவில்லை. மேலும் விண்ணப்பித்தவர்களிடம் வேலை வாங்கித் தருவ தாகக் கூறி மோசடிகள் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழு கிறது. எனவே எழுத்து தேர்வை புதுச்சேரி அரசு உடனடி யாக அறிவிக்க வேண்டும். அதேபோல் மின் துறையில் இளநிலை மற்றும் உதவி பொறியாளர்கள் பணியிடங்களுக்கு ஓய்வு பெற்றவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.