புதுச்சேரி,ஜூன் 10- புதுச்சேரி பாஜக அமைச்சர் தொகுதியில் கழிவறை வசதி கூட இல்லாத இருளர் மக்கள் அவதிப்படு வதை ஒட்டி தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகார் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட காட்டேரி குப்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
அங்குள்ள மக்க ளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி மாநில செய லாளர் சரவணன், பொருளாளர் உமா சாந்தி, நிர்வாகிகள் விநாய கம், சந்திரன், நிலவழகன், அரசு ஆகி யோர் பழங்குடியினர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் கள ஆய்வு குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- காட்டேரிக்குப்பம் பகுதியில் 50 ஆண்டு காலமாக வசித்து வரும் மக்களுக்கு இன்றளவும் மனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது.மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்திற்கு தலா ரூ 20 ஆயிரம் என கணக்கிடப்பட்டு அரசு சார்பில் இலவச கழிவறை கட்டுவதற்கு கட்டு மான பொருட்கள் அங்கு இறக்கி வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு பணம் சென்று விட்டது.
கட்டுமான பொருட்கள் பொது வெளியில் பாதுகாப்பு இன்றி உள்ளதால் அவை சேதம் அடைந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை முறையிட்டும், இது நாள் வரை அலட்சியப் போக்கு நீடித்து வரு கிறது. புதுச்சேரி அரசு அண்மையில் 100 விழுக்காடு கழிவறை உள்ள மாநிலம் என்ற விருது பெற்றுள்ளது. இங்கு உள்ள குளம் தூர் வாரப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் அரசு சார்பில் எந்தவிதமான நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்தின் தொகுதியிலேயே இது போன்ற அவல நிலை தொடர்கதையாக உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடி யாக தலையிட்டு இருளர் இன மக்க ளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடிதத்தில் வலி யுறுத்தியுள்ளது.