புதுச்சேரி,நவ.28- கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர், விவசாயிகள் நல சட்டங்களில் திருத்தம் செய்யும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து புதுச் சேரி துணைநிலை ஆளுநர் மாளி கையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
ஒன்றிய பாஜக அரசு தொழிலாளர் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்றுவதை கைவிட வேண்டும்.பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை குறைக்க வேண்டும். தேசிய குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26,000 என நிர்ணயம் செய்ய வேண்டும். விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி புதுச்சேரி பிள்ளைத் தோட்டம் பெரியார் சிலையில் இருந்து துவங்கிய ஊர்வலம் புறப்பட்டது. காமராஜர் சிலையை கடந்து நேரு வீதி வழியாக ஆளுநர் மாளிகையை நோக்கி சென்றபோது மாதா கோவில் சந்திப்பில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சிஐடியு மாநில செயலாளர் சீனிவாசன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம், ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கி னர். சிஐடியு மாநில தலைவர் பிரபுராஜ், ஏஐடியுசி மாநில தலைவர் அபிஷேகம், ஏஐசிசிடியு பொதுச் செயலாளர் புருஷோத்தமன் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சங்கர், கீதா நாதன், தமிழ்ச்செல்வன், ரவி, விஜயபாலன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.