புதுச்சேரி, பிப். 16- விபத்தில் பாதிக்கப்பட்ட மின் ஊழியர்களின் உயர் மருத்துவ செல விற்கு அரசு உதவி செய்ய மறுப்ப தால் ஊழியர்களிடேமே நிதி வசூலிக் கும் அவல நிலை உள்ளது. புதுச்சேரி அரசின் மின் துறை யில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழி யர்கள் பணியாற்றி வருகின்றனர். மரப்பாளையம், தட்டாஞ்சாவடி, வில்லியனூர், தொண்டமாநத்தம், பாகூர், திருக்கனூர், வெங்கட்டாநகர் ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையங்கள் உள்ளன. கடந்த 11 ஆம் தேதி தொண்டமாநத்தம் துணை மின்நிலைய பராமரிப்பு பணியில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடு பட்டுள்ளனர். மின் உற்பத்தி பிரிவின் உதவி பொறியாளர் உத்தரவின் பேரில், இளநிலை பொறியாளர் இளங்கோவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெற்றுள்ளது. அனைத்து வழிகாட்டு நெறி முறைகளோடு ஊழியர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டி ருந்தபோது திடீரென்று டிரான்ஸ் பார்மர் வெடித்துள்ளது. இந்த விபத்தில் மின் ஊழியர் சிவக்குமார், உதவி மின் ஊழியர் சிவனேசன் ஆகி யோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட் டது. உடனடியாக 2 ஊழியர்களையும் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் மருத்துவர்களின் பரிந்துரைப் படி சிவக்குமார் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தல்
புதுச்சேரி மின்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கண்கானிப்பு பொறியா ளரை சந்தித்து மின் விபத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் மருத் துவ செலவிற்கு அரசு பொறுப் பேற்று செலவு செய்ய வேண்டும் என்று வலியறுத்தியதாக சிஐடியு தலைவர்களில் ஒருவரும், மின்துறை ஊழியர்கள் போராட்டக்குழு ஆலோசகருமான ஜி.ராமசாமி தெரி வித்தார். ஊழியர்களின் மருத்துவ செலவிற்கு அரசு சார்பில் வழங் கப்படும் நிவாரணம் சிகிச்சை முடிந்து பல மாதங்களுக்கு பிறகு கிடைக் கிறது. அதனால் என்ன பயன். எனவே உடனடியாக கிடைப்பதற்கு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரசு துறையின் அவல நிலை
மின் பழுது பார்க்கும் பணியின் போது எதிர்பாராத விபத்து நேரிடும் போது ஊழியர்களின் மருத்துவ செலவிற்கு சம்பந்தப்பட்ட துறையே பொறுப்பேற்க வேண்டும். தற்போது விபத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிவக்குமார், சிவனே சன் ஊழியர்களின் மருத்துவ செல விற்கு பல லட்சங்கள் செலவாகும் என கூறப்படுகிறது. இந்த மருத்துவ செலவிற்கான தொகையை ஒவ் வொரு ஊழியர்களிடம் வசூலித்து வழங்க வேண்டிய நிலைக்கு புதுச் சேரி மின்துறை ஊழியர்கள் தள்ளப் பட்டுள்ளனர். அரசின் கட்டுப்பாட் டில் உள்ள மின்துறை ஊழியர்க ளுக்கே இந்த நிலை என்றால். புதுச் சேரி மின்துறை தனியாரிடம் சென்றால் என்ன நிலை ஏற்படும் என்ற அய்யம் ஒவ்வொரு மின்சார ஊழியர் கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.