புதுச்சேரி, ஜூலை 7- புதுச்சேரி பிரதேச சிஐடியு ஆட்டோ ஓட்டு நர்கள் சங்கம் மற்றும் இந்தியா விஷன் இன்ஸ்டியூட் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் புதுச்சேரி காந்தி வீதி, முத்துமாரியம்மன் கோவில் வீதி சந்திப்பில் நடைபெற்றது. இந்த பரிசோதனை முகாமிற்கு சிஐடியு ஆட்டோ சங்க பிரதேசத் தலைவர் மண வாளன் தலைமை தாங்கினார். சங்கத்தின் கவுரவத் தலைவர் தா.முருகன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு பிரதேச செய லாளர் சீனிவாசன், நிர்வாகிகள் மதி வாணன், விஜயகுமார், ரவிக்குமார், செல்வம்,ராமு,முருகன், மனோகர், ஆனந்த், பழனிபாலன் உளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர். இந்தியா விஷன் இன்ஸ்டியூட் நிறு வனத்தின் மருத்துவர்கள் துளசி, சரண்யாலட்சுமி ஆகியோர் கண் பரி சோதனை செய்தனர். கண் பரிசோதனை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.