districts

பண்டிகை பஜார்’ அமைக்க புதுச்சேரி  அரசுக்கு மாதர் சங்கம் கோரிக்கை

புதுச்சேரி, நவ.5- பண்டிகை பஜார்  அமைத்து மானிய விலையில் அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு மாதர்  சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச் சேரி மாநில தலைவர் முனியம்மாள், செயலாளர்  இளவரசி ஆகியோர் குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனரிடம் வழங்கியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் ரேசன் கடை திறக்காமல் இருப்பது கிராம ப்புற நகர்புற ஏழை எளிய மக்கள் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். புதுச்சேரி மக்கள் விலை வாசி உயர்வால்   சரிவிகித  உணவு  உண்பது கேள்விக்குறியாகி உள்ளது. ரேசன் பொருட்கள் வழங் காததால் பெண்களும் , குழைந்தை களும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு,இரத்த சோகை நோயால்  பாதிக்கப்படுகின்றனர். எனவே தான் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பாக ரேஷன் கடைகளை திறந்து   அத்தியவசிய பொருட்கள் வழங்க வலியுறுத்தி பிப்ரவரி 02-2023-ல் அன்று குடிமை பொருள் வழங்கல் துறை அருகில் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தி  மனு அளித்தோம். 

அப்போது தாங்கள் கோப்பு தயா ராக உள்ளது. அரசிடம் இருந்து எங்களுக்கு அனுமதி கிடைத்த வுடன் நாங்கள் ரேசன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று கூறினார்கள். இதுநாள் வரை  ரேஷன் கடைகளை திறந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கவில்லை. தற்போது கடுமையான விலைவாசி உயர்வால், வேலையின்மையால் ஏழை எளிய மக்கள் அவதிபடு கின்றனர். ஆகவே ரேசன் கடை களை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தி யாவாசிய பொருட்களை வழங்க வேண்டும். வருகின்ற காலம் பண்டிகை காலம் என்பதால் பண்டிகை பஜார் அமைத்து அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை  மானிய விலையில்  வழங்க ஆவண செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.