districts

img

மின்துறையை தனியார் மயமாக்கும் புதுச்சேரி அரசுக்கு கண்டனம்

புதுச்சேரி, மே.30- மின்துறை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து புதுச்சேரி விவ சாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று (மே.30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மதகடிப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைகூடம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி பிரதேச கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வி.வடிவேல் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செய லாளர் துளசிநாராயணன், அகில இந்திய விவசாயிகள் சங்க பிரதேச செயலாளர் வே.சங்கர்,சிபிஎம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர்   இரகு.அன்பு மணி, மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பாலசந்திரன்,விநாயகம்,சிவஞானம்,பெரியசாமி,முத்து,ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். லிங்காரெட்டியார்பாளைய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் உரம் உள்ளிட்ட இடு பொருட்களை அரசு கொள்முதல் செய்து வழங்க வேண்டும். ஒழுங்கு முறை விற்பனைகூடத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.