districts

img

பாஜக கூட்டணி ஆட்சியில் தங்குதடையற்ற போதைப் பொருள் புழக்கம்

முத்தியால்பேட்டையில், கொடூர மான முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட 9 வயதுச் சிறுமிக்கு நீதி கேட்டு, இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டத் தால் புதுச்சேரி முடங்கியது.

கஞ்சா விற்பனை அமோகம்
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் அலட்சியத்தால் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மாநிலம் முழு மைக்கும் அதிகமாக புழக்கத்தில் உள் ளது. இதனால் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை எச்சரித்தும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இதன் விளைவு நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, சமூக விரோத நடவடிக்கை களில் எதிரொலித்து வருகிறது. முத்தி யால்பேட்டையில் 9 வயதுச் சிறுமி பாலியல் வன்கொலைக்கும் இதுவே காரணமாக அமைந்துள்ளது. 

எனவே, சிறுமி பாலியல் வன் கொலை - அதற்கு காரணமான கட்டுக் கடங்காத போதைப் பொருள் புழக்கம் ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று முத லமைச்சர் ரங்கசாமி, பாஜக அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி யும் இந்தியா கூட்டணி கட்சிகள் வெள்ளி யன்று முழு அடைப்புப் போராட்டத் திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இப்போராட்டத்திற்கு மக்கள் பேரா தரவு அளித்துள்ளனர்.

வெறிச்சோடிய பேருந்து நிலையம்
புதுச்சேரி புதிய பேருந்து நிலை யத்திலிருந்து பேருந்துகள் ஒன்றுகூட இயக்கப்படவில்லை. புதுச்சேரியில் தனியார் பேருந்துகளே அதிகம் என்ற நிலையில், போராட்டத்திற்கு ஆதர வாக தனியார் பேருந்துகளும் இயக்கப் படவில்லை. புதுவை அரசு போக்கு வரத்து கழகப் பேருந்துகளும் ஓட வில்லை. இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடியது. அதேபோல் ஆட் டோக்கள், டெம்போக்கள் இயக்கப்பட வில்லை. 

புதுச்சேரி முழு அடைப்பு போராட்டம் எதிரொலியாக கடலூர், விழுப்புரத்தில் இருந்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. கடலூர், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் முற்றிலும் ஓடவில்லை. புதுச்சேரி வழி யாக சென்னை செல்லும் பேருந்துகள் விழுப்புரம் மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன.

கடைகள் முழுமையாக அடைப்பு
நகர பகுதியில் பெரிய வணிக நிறு வனங்கள் முதல் சிறிய கடைகள் வரை  அடைக்கப்பட்டிருந்தன. நேரு வீதி, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, புஸ்ஸி வீதி, காமராஜர் சாலை,  படேல் சாலை, திருவள்ளுவர் சாலை,  மிஷன் வீதிகளில் இருந்த பெரும் பாலான கடைகள் அடைக்கப்பட்டி ருந்தன. பெரிய மார்க்கெட், சின்னி மணிக்கூண்டு, நெல்லித்தோப்பு மார்க்கெட் கடைகள் இயங்கவில்லை. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள் மட்டும் வழக்கம்போல இயங்கின.

பள்ளி வாகனங்களுக்கு அனுமதி
போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர், தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக் காக பள்ளி, கல்லூரி வாகனங்களை நிறுத்தமாட்டோம் என தெரிவித்திருந்த னர். இதன்படி பிளஸ் 2 தேர்வு எழு தும் மாணவர்களுக்கான பள்ளிப் பேருந்துகள் மட்டும் ஒடின. பெரும் பாலான தேர்வு எழுதும் மாணவர் களை பெற்றோர் தங்கள் வாக னங்களில் அழைத்து சென்றனர்.

அதே நேரத்தில் தனியார் பள்ளி கள், கல்லூரிகள் இயங்கவில்லை. அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாண வர்கள் வருகை குறைவாக இருந்தது. சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட தொழிற் பேட்டைகளில் ஒரு சில தொழிற்சாலை களை தவிர பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

ஆதரவுப் போராட்டம்
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் வியா பாரிகள், ஆட்டோ, டெம்போ, தனியார்  பேருந்து உரிமையாளர்கள், தொழிற் சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் நடவடிக்கையை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் காமராஜர் சிலை எதிரில் இருந்து ஆளுநர் மாளிகை வரை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்தியா கூட்டணி கட்சித் தலை வர்கள், முன்னாள் முதல்வர் நாரா யணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் சிவா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் வி. பெருமாள், அ.மு. சலீம், விஸ்வநாதன், தேவப்பொழிலன், திமுக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்ற னர்.

தள்ளு-முள்ளு; கைது!
போராட்டத்தின் இறுதியில்  ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது இந்தியா கூட்டணி கட்சி  தலைவர்களுக்கும் காவல்துறை யினருக்கும் வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

புதுச்சேரி, காரைக்காலில் அதிமுக சார்பிலும் தனியாக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதிமுகவினரும் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.