புதுச்சேரி, ஜூன் 24- 15 வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்க கோரி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சார்பில் புதுச்சேரியில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் நடை பெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனம் செய்வதை கைவிடக் கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் புதுச்சேரியில் இந்த ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் நடை பெற்றது. சிஐடியு நிர்வாகிகள் சிவக்குமார், ராஜாராம் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். சிபிஎம் புதுச்சேரி மூத்த மாநில குழு உறுப்பினர் முருகன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
சிஐடியு புதுச்சேரி மாநில செயலாளர் சீனிவாசன், அரசு விரைவு போக்குவரத்து கழக மாநில துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகி யோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். இறுதியாக (ஜூன் 25) செவ்வாயன்று நடை பெறும் போராட்டத்தை சிபிஎம் மாநில செயலாளர் ராஜாங்கம் நிறைவு செய்து பேசுகிறார். தமிழ்நாடு அரசு மாநில போக்குவரத்து கழக தொழிலாளர்களும், அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.