districts

img

மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வை நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரி, அக். 31- மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வை உடனே நடத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒரு மாத காலமாகியும் புதுச்சேரி அரசின் உயர்கல்வித் துறையும், சென்டாக் நிர்வாகமும், மருத்துவ கல்விக்கான தகுதி பட்டியலை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, தரவரிசை பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும். தனியார்கல்வி நிறுவனங்களில் அரசுக்கு வழங்க வேண்டிய 50 விழுக்காடு இடங்களை உறுதிப்படுத்த வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தினர். லாஸ்பேட்டையில் உள்ள உயர்கல்வித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் தலைவர் ஜெயபிரகாஷ், வாலிபர் சங்க தலைவர் கவுசிகன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். இதில் இரண்டு அமைப்பின் நிர்வாகிகள் பிரவீன், ஆனந்த், அபிஜித், ரஞ்சித் குமார், பாஸ்கர், அஜித், நூருதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;