புதுச்சேரி, அக். 18- ரேசன்கடைகளை திறக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில் நூதனப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன்கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும், நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும், நுண்நிதி நிறுவனங்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினர். செயலாளர் இளவரசி, நிர்வாகிகள் சத்தியா, உமாவிநாயகம், கலைச் செல்வி, கோமதி, பரிமளா, மலர்விழி, ஜானகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய, மாநில ஆட்சியாளர்களின் தவறான மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து பெண்கள் செய்த நையாண்டி தர்பார் அனை வரையும் வெகுவாக கவர்ந்தன.