புதுச்சேரி, ஜூன் 15- புதுச்சேரியில் மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் என்.ஆர்.காங்கி ரஸ், பாஜக கூட்டணி அரசு மீண்டும் மின்சாரக்கட்டணத்தை உயர்த்தியுள் ளது.
புதுச்சேரி மின்துறை அரசின் கட்டுபாட்டிலேயே உள்ளது. இத்துறையை தனியார் வசமாக்க ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு கடும் முயற்சிகளை எடுத்தது. அதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்பு கள்,மின்துறை ஊழியர்கள் ஆகி யோரின் எதிர்ப்பால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மின்சாரத் துறையை தனியார்மயமாக்க தொடர்ந்து பாஜக பல்வேறு முயற் சிகளை மேற்கொண்டு வருகிறது.
மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு
கோவாவில் உள்ள யூனியன் பிரதேசத்திற்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் மின்சாரக்கட்டணத்தை உயர்த்தும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது. அதன்படி இந்தாண்டு புதுச்சேரியில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒழுங்குமுறை ஆணையரி டம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. மேலும் தனியார் நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ள கோடிக்கணக்கான தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத் தியிருந்தார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
கட்டணம் உயர்வுக்கு அனுமதி
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் புதுச்சேரி மின்துறை விண்ணப்பித்தது. இதன்படி இந்த ஆண்டு வீட்டு உபயோகத்துக்கு ஒரு யூனிட்டுக்கு சராசரியாக 50 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தவும், வர்த்தக பயன்பாட்டுக்கு சராசரியாக ஒரு ரூபாய் வரை கட்டணம் உயர்த்த வும் புதுச்சேரி அரசு இணை ஒழுங்கு முறை ஆணையத்திடம் வலியுறுத்தி இருந்து. இந்நிலையில் அரசு விண்ணப்பத்தில் திருத்திய கட்டணத் துக்கு இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
அனுமதி மறுப்பு
குடிசை தொழில்களை பொருத்த வரை 100 யூனிட் வரை ரூ. 2.25ல் இருந்து ரூ. 2.75 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை ரூ. 3.25ல் இருந்து ரூ. 4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை ரூ. 5.40ல் இருந்து ரூ.6 ஆகவும், 301 யூனிட்டுக்கு மேல் ரூ. 6.80ல் இருந்து ரூ. 7.50 ஆக வும் உயர்த்த விண்ணப்பித்தனர். ஆனால் அதற்கும் அனுமதி தராததால் பழைய கட்டணமே தொடருகிறது.
இதையடுத்து விரைவில் அரசு இக்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளது. அதன்படி புதுச்சேரி வீட்டு மின் நுகர் வோர்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை ஜூலை மாதம் முதல் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.