புதுச்சேரி,ஜூலை.13- புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு நீதிமன்றம் உள்ளிட்ட 7 புதிய நீதிமன்றங்களை சென்னை உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் சனிக்கிழமை (ஜூலை13) திறந்து வைத்தார்.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், நடமாடும் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் 5, 6 மற்றும் 7, கூடுதல் மாவட்ட தலைமை நீதிமன்றம் எண் 3 என மொத்தம் 7 நீதிமன்றங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது .சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆா்.மகாதேவன் தலைமை தாங்கி புதிய நீதிமன்றங்களைத் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் துணைநிலை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ரங்கசாமி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சரவணன்,.கோவிந்தராஜன் திலகவதி, உயா்நீதிமன்ற நீதிபதிகள் கலைமதி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். தலைமைச் செயலர் சரத் சௌகான், புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன், அரசுச் செயலர் சத்தியமூர்த்தி,, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், புதுச்சேரி தலைமை மாஜிஸ்திரேட் தி. பாலகிருஷ்ணன், புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவா் சி.டி.ரமேஷ், பொதுச்செயலா் வி.நாராயணகுமார் மற்றும் வழக்கறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.