புதுச்சேரி, பிப். 7- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி சேவையை உடனே வழங்கக்கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர்களுக் கான ஊதிய மாற்று பிரச்சனையை தீர்க்க வேண்டும், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் அருகே ஊழியர் சங் கங்களின் தலைவர் அபுபக்கர், ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சிஐடியு புதுச்சேரி மாநில துணைத்தலைவர் கொளஞ் சியப்பன், ஓய்வூதியர் சங்கத்தின் அமைப்பு செயலாளர் ராம கிருஷ்ணன், நிர்வாகிகள் முருகை யன், காமராஜ் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.