புதுச்சேரி, ஜன.25- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்து செய்தி வருமாறு: உலகின் மிகப்பெரிய ஜனநாயக கட்டமைப்பை கொண்டதாக நம் நாட்டு விளங்க இனம், சாதி, பாலி னம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவம், சுதந்திரம், சமநீதி போன்ற அடிப்படை உரிமைகளை வழங்கும் குடியரசு இருப்பதுதான் காரணம்.
இறையாண்மை கொண்ட ஜனநாயகத்தை உறுதி செய்யும் வலுவான அமைப்பை உருவாக்கிய வர்களையும், தேசத்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல பாடுபட்ட தேசத் தலைவர்களையும் இத்தரு ணத்தில் நினைத்து போற்ற வேண்டும். மக்கள் நலத்திட்டங் களை தொடர்நது செயல் படுத்தி குடியரசு என்ற சொல் லுக்கு அணி சேர்க்கும் அரசாக எங்கள் அரசு விளங்குகிறது.
சட்டசபை யில் அறிவித்த அனைத்து திட்டங்களும் ஒவ்வொன் றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. முன்னேறி வரும் மாநிலங்களில் முதன்மை யான இடத்தை பெற்றுள் ளது. வேகமான வளர்ச்சியை நோக்கி முன்னேற உங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து அரசுக்கு நல்க வேண்டும். புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.