புதுச்சேரி, ஜூன் 24- திறமையும் அனுபவமும் இல்லாத புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராஜீவ் அகர்வாலை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. லக்னோவிலுள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் துறைத் தலை வராக பணியாற்றி வந்த ராஜீவ் அகர்வால், போதுமான தகுதியும், திறமையும் அனு பவமும் இல்லாத நிலையில் ஜிப்மர் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனைக்கு இயக்குநராக ஒன்றிய பாஜக அரசு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். உலகத்தரம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனையை தனியார் மயமாக்குவதற்கு தீவிரமாக முயற்சித்து வரும் ராஜீவ் அகர்வால், ஜிப்மரின் செயல்பாட்டை படிப்படியாக சீர்குலைக்கும் வகையில் திட்டம் போட்டு செயல்படுகிறார். இலவச சிகிச்சை முறையை ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஜிப்மருக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக செலவழிக்காமல் திருப்பி அனுப்புகின்றனர். ராஜீவ் அகர்வாலின் மிக மோசமான நிர்வாக நடவடிக்கை காரணமாக நோயாளிகள் பெற்று வந்த சலுகைகளும், ஊழியர்க ளுக்கும் வழங்கப்பட்டு வந்த உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. குறிப்பாக விளிம்பு நிலை மக்களுக்கு இலவச மருத்து வம் மறுக்கப்பட்டதை ஆரம்பத்தி லேயே மார்க்சிஸ்ட் கட்சி அம்பலப் படுத்தியது. ஆனால், அன்றைக்கு மருந்து தட்டுப்பாடு ஏதும் இல்லை. நிதி எதுவும் ஒன்றிய சுகாதார துறை அமைச்சகத்திற்கு திருப்பி அனுப்ப வில்லை. ஜிப்மர் நிர்வாகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என தனி யார் முதலாளியை போல் இயக்கு நர் ராஜீவ் அகர்வால் மறுப்பு அறிக்கையை வெளியிட்டார். கடந்த 40 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு நிலைமைகள் சென்றுக்கொண்டிருக்கிறது.ஊழியர்கள் உரிமைகள் நசுக்கப்ப டுகின்றன. 80 முதல் 100 வகையி லான மருந்துகளை வெளி யில் வாங்க வேண்டிய கட்டாய நிலைக்கு நோயாளிகள் தள்ளப்ப ட்டுள்ளனர். ராஜீவ் அகர்வாலின் செயலற்ற நிர்வாகத்தை இனியும் அனுமதிக்க முடியாது என்பதால் 35 ஆண்டு களுக் மேலாக மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் முதல் அனைத்து ஊழியர்களும் வெகுண்டெழுந்து ஜிப்மரை பாது காக்கும் போராட்டத்தில் இறங்கி யுள்ளனர். எனவே, வெளிப்படைத் தன்மையற்ற, ஊழல் மலிந்த தனி யார் நிறுவனங்களுக்கு ஆதர வாக செயல்படும் ஜிப்மர் மருத்து வமனை இயக்குநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து, ஏழைகளுக்கான மருத்துவ மனையாக மீண்டும் ஜிப்மர்செ யல்பட ஒன்றிய அரசும் புதுச்சேரி அரசும் தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.