districts

img

நடுக்கடலில் மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

புதுச்சேரி, அக். 15- புதுவை மாநிலம் காரைக் கால் பகுதியில் உள்ள காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் தனசீலன். இவர் தனக்கு சொந்த மான பைபர் படகில் கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் மணியன், அய்யப்பன், சதீஷ், மணி பாலன், அபினேஷ், மாதேஷ் ஆகியோரும் சென்றிருந்தனர். இவர்கள் கோடியக்கரை அருகே வெள்ளிக்கிழமை இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் காரைக்கால் மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் இரும்பு பைப், பட்டாக்கத்தி ஆகிய வற்றால் காரைக்கால் மீனவர் கள் 7 பேரையும் கொடூரமாக தாக்கினர். மேலும் படகில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான மீன்கள், வலை, செல்போன், திசை காட்டும் கருவி, டார்ச் லைட் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் காரைக்கால் மீன வர்கள் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். கரைக்கு தப்பி வந்த மீனவர்களை கிராம மக்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர் பாக புதுவை மாநில அரசும், ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என மீனவர்கள் எச்சரித்தனர்.