புதுச்சேரி, ஜூன் 6- அலை கழிக்கப் பட்ட மாணவிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் முயற்சியால் சாதிசான்றிதழ் வழங்கப் பட்டது.
உயர்கல்விக்கு செல்லும் புதுச்சேரி மாணவர்களுக்கு சாதி, குடியிருப்பு சான்றிதழ் கிடைப்பதில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருகிறது. சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதத்தால் மாணவர்கள், பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டனர்.
ஆட்சியரிடம் முறையீடு
புதுச்சேரியில் புலம்பெயர்ந்த ஆதி திராவிடர்களின் பிள்ளைகள் மேல்படிப்பிற் காக சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிரமங்களை கண்டறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி மாநில தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் சரவணன், நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், குப்புசாமி, விநாயகம், உமாசாந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவருடன் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சந்தித்து முறையிட்டனர்.
சான்றிதழ் வழங்க உத்தரவு
சம்பந்தப்பட்ட தாசில்தாரை அழைத்து பேசிய ஆட்சியர் குலோத்துங்கன், சான்றி தழை உடனடியாக மாணவிக்கு வழங்க உத்தரவிட்டதோடு மாணவர்கள் பாதிக்காத வகையில் உடனடியாக சான்றிதழ் வழங்கிடுமாறு கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவரிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது.