புதுச்சேரி, ஜூன் 13- விஷ வாயு தாக்கிய பகுதியில் மீண்டும் ஒரு பெண் மயக்கமானதை தொடர்ந்து மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புது நகரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஷவாயு தாக்கி ஒரு சிறுமி உட்பட 3 பெண்கள் உயிரிழந்த னர்.
பொதுப்பணித்துறையின் கழிவு நீர் கோட்ட அதிகாரிகள் அலட்சியத்தால் நிகழ்ந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களி டையே இன்னும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அப்பகுதியில் சுகா தாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாழனன்று புஷ்பராணி (34) என்ற பெண் மயக்கம் அடைந்தார். அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அப்பகுதியை சேர்ந்த பூமகள், சுலோசனா, மாரி செல்வம் ஆகிய 3 பேருக்கு மூச்சுத்திணறல் உள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு உரிய பரி சோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அப்பகுதியில் பொதுப்பணித் துறை, நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வை யில் பாதாள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வரு கிறது?. அப்பகுதியில் உள்ள பள்ளி களுக்கும் ஜூன் 17 தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புது நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக சிபிஎம் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, பொதுப்பணித்துறை அதிகாரிகளை வர வழைத்து மக்களை பாதுகாக்க கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.