districts

img

பணி நிறைவு பாராட்டு விழா

புதுக்கோட்டை, ஜூன் 28 - எல்ஐசி அலுவலகத்தில் ஊழியராகவும், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட துணைத் தலைவராகவும் பல  ஆண்டுகள் பணியாற்றிய என்.கண்ணம் மாள் ஜூன் 30-ல் பணி ஓய்வு பெறுகிறார். அவரது பணி நிறைவு பாராட்டு விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது.  விழாவிற்கு சங்கத்தின் தஞ்சை கோட்டத்  தலைவர் சே.செல்வராஜ் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் எம்.கிரிஜா, துணைத் தலைவர் க.சுவாமிநாதன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மகளிர் ஒருங்கிணைப்பாளர் ஜெ.விஜயா, இரா.புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக கோட்டப் பொதுச் செயலாளர் வ.சேதுராமன் வரவேற்க,  என்.கண்ணம்மாள் ஏற்புரை வழங்கினார். ஆர்.சீதளா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

;