புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி வார்டு எண்.15-ல் வெண்ணவாள்குளம் கரையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் புதிதாக போடப்பட்ட ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் விசைப்பம்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது. இதனை நகர்மன்ற தலைவர் இரா.ஆனந்த் துவங்கி வைத்தார். பின்னர் 15-வது வார்டில் கொல்லக்காடு-காரைக்குடி சாலை பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.