districts

img

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க சிஐடியு கோரிக்கை

புதுக்கோட்டை, மே 24 - மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு இலவச சேவை வழங்கிவரும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வரவுக்கும், செலவுக்குமான இடைப் பட்ட தொகையை அரசே ஏற்று வழங்க வேண்டு மென சிஐடியு வலியுறுத்தி உள்ளது. அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின்  (சிஐடியு) புதுக்கோட்டை மண்டல 15 ஆவது  ஆண்டுப் பேரவை திங்கள்கிழமை கந்தர்வ கோட்டையில் நடைபெற்றது. பேரவைக்கு மண்டலத் தலைவர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். மூத்த தோழர் பெரி. குமாரவேல் சங்கத்தின் கொடியை ஏற்றினார்.  சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் தொடக்கவுரையாற்றினார். வேலை அறிக் கையை பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிர மணியன், நிதிநிலை அறிக்கையை பொரு ளாளர் டி.சந்தானம் ஆகியோர் முன்வைத்தனர். பேரவையை வாழ்த்தி கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, குடந்தை மண்டல பொதுச் செய லாளர் மணிமாறன், நாகை மண்டல பொதுச் செயலாளர் ராசேந்திரன், தோழமைச் சங்க  நிர்வாகிகள் மாரிக்கண்ணு, லோகநாதன் ஆகி யோர் பேசினர். சம்மேளன துணை பொதுச் செயலாளர் மு.ஆறுமுகநயினார் நிறை வுரையாற்றினார். தலைவராக கே.கார்த்தி கேயன், பொதுச் செயலாளராக, ஆர்.மணி மாறன், பொருளாளராக எம்.முத்துக்குமார், துணை பொதுச் செயலாளராக எஸ்.செந்தில் குமார் உள்ளிட்டோர்  தேர்வு செய்யப்பட்டனர்.  மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு இலவச சேவை வழங்கி வரும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தில் வரவுக்கும், செலவுக்குமான இடைப்பட்ட  தொகையை அரசே ஏற்று வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும். ஓய்வு பெற்றோ ரின் பணப்பலன், அகவிலைப்படி, மருத்துவ வசதிகளை விரைந்து வழங்க வேண்டும். சீனியாரிட்டி முறையில் சுழல்முறை பேட்ஜ்  வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு  மாறாக டீசல் கேட்டு கெடுபிடி செய்யக் கூடாது. எட்டுமணி நேர வேலையை உத்தரவா தப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

;