districts

சாதி ஆதிக்க வெறியர்களால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை பாதுகாத்திடுக! இடதுசாரிக் கட்சிகள், விசிக வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூலை 4 - சாதி ஆதிக்க வெறியர்களால் தொ டர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் பட்டியலின மக்களை பாதுகாக்கும்  வகையில் தமிழக அரசும், புதுக் கோட்டை மாவட்ட நிர்வாகமும் செயல் பட வேண்டுமென இடதுசாரிக் கட்சிகள்  மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செய லாளர் செப.பாவாணன், சிபிஐ(எம்எல்)  கட்சி மாவட்டச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் இணைந்து  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமுவிடம் அளித்துள்ள கோ ரிக்கை மனுவில் தெரிவித்துள்ள தாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டி யலின வகுப்பைச் சேர்ந்த கல்லூரி  மாணவியை தர்மராஜ் என்பவன் கடந்த  ஜூலை 14 அன்று பாலியல் வன்கொ டுமை செய்ய முயன்றுள்ளான். இது குறித்து வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததற்காக பட்டியலின மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து  சாதி வெறியர்கள் கொலை வெறித்  தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 5  பேர் கை, கால்களில் உறுப்பு சிதைவு ஏற்பட்டு கடந்த 19 நாட்களாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் கைது செய்யப்படவில்லை.

மாணவியை பாலியல் ரீதியாக கொச் சைப்படுத்தி துண்டுப் பிரசுரம் வெளி யிட்டவர்கள் மீதும் காவல்துறை நட வடிக்கை எடுக்கவில்லை. இந்நிலை யில், மருத்துவமனையில் விரல் துண்டிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பட்டியலின இளைஞர் மீது பொய் வழக்குப் போட்டு காவல்துறை சிறை யில் அடைத்துள்ளது. சாதி வெறியர் களுக்கு மாவட்ட காவல்துறை துணை போவதையே இச்செயல் காட்டுகிறது. எனவே, குற்றவாளிகளுக்கு ஆதர வாக செயல்படும் காவல் துணைக் கண்காணிப்பாளர் வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறைரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும். பட்டியலின மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடன டியாக திரும்பப் பெற வேண்டும். பட்டிய லின மக்களின் குடியிருப்புகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று அரசு நிர்வாகம் செயல் பட வேண்டும்.  இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.