புதுக்கோட்டை, ஜன.11- புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில், வேங்கைவயல் மக்களை கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தது, இரட்டை குவளை முறையை கடைபிடித்தது உள் ளிட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 2 பேரின் ஜாமீன் மனுக்கள் செவ்வாயன்று தள்ளுபடி செய் யப்பட்டன. புதுக்கோட்டையை அடுத்த முட்டுக் காடு ஊராட்சி வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது டிச.26-ம் தேதி தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இறையூர் அய்யனார் கோயிலுக்குள் வேங்கைவயல் பகுதி மக்களை செல்ல விடாமல் தடுத்தது, இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட் டது குறித்து 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த வெள்ளனூர் காவல் நிலையத்தி னர், அதில், மூக்கையா, சிங்கம்மாள் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கைதாகி உள்ள சிங்கம்மாள், மூக் கையா ஆகியோர் ஜாமீன் கோரி ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சத்யா, கள நிலவரத்தை விசாரிப்பதற்காக 2 வழக்க றிஞர்கள் கொண்ட விசாரணைக் குழுவை ஜன.4-ம் தேதி அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, இரு நபர் கொண்ட விசா ரணைக் குழுவினர் வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களுக்கு சென்று இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் ஜன.6-ம் தேதி தாக்கல் செய்ததாகக் கூறப் படுகிறது. மீண்டும் செவ்வாயன்று விசா ரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, இருவருக்கும் ஜாமீன் அளிக்க மறுத்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சமூக நீதிக் கண்காணிப்புக் குழு நாளை ஆய்வு
நீர்த்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாத நபர்களால் மனிதக் கழிவு கலக் கப்பட்டது தொடர்பாக, சமூக நீதிக் கண்கா ணிப்புக் குழுவில் உள்ள சுவாமிநாதன் தேவ தாஸ், ஆர்.ராஜேந்திரன், கோ.கருணாநிதி, சாந்தி ரவீந்திரநாத் ஆகிய 4 உறுப்பி னர்களைக் கொண்ட துணைக் குழு வேங்கைவயல் கிராமத்தில் ஜனவரி 13-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்கிறது. மேலும், அன்றைய தினமே ஆட்சியர், எஸ்.பி ஆகி யோருடன் கலந்துரையாட உள்ளதாக சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பி னர் செயலர் தெரிவித்துள்ளார்.