புதுக்கோட்டை, ஏப்.9 - புதுக்கோட்டை மாவட்ட உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தலைவர் சமரச மற்ற போராளி தோழர் க. செல்வராஜ்(56) உடல்நலக் குறைவால் வெள்ளிக் கிழமை காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி அனைத்துக் கட்சித் தலைவர்களின் அஞ்ச லியுடன் சனிக்கிழமை நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பி னராக பல ஆண்டுகள் பணி யாற்றி, மாவட்டத்தில் செங் கொடி இயக்கத்தை வளர்க்க அரும்பாடுபட்டவர். சிஐடியு தொழிற்சங்கத்தில் மாவட்டச் செயலாளராக, தலைவராக மாநிலக்குழு உறுப்பினராக பல ஆண்டு காலம் பணி யாற்றி, உழைப்பாளி மக்க ளின் நம்பிக்கை நட்சத்திர மாக திகழ்ந்தவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாவட்ட செயலாளராக பணியாற்றி இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர். 35 ஆண்டுகளுக்கு மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பம்பரமாக சுழன்று மக்கள் பணி யாற்றிய தோழர் க.செல்வ ராஜ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக் கிழமை மாலை சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். அன்னாரின் மனை விக்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம்.சின்ன துரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிஐடியு மாநில செயலாளர் எம்.ஹாடாஹெலன், அறந்தாங்கி ஒன்றிய குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு மற்றும் மூத்த தோழர் கள், உறுப்பினர்கள் எம்.ஜியாவுதீன், ஏ.ராமையன், ஏ. ஸ்ரீதர், என்.பொன்னி, கே. சண்முகம், சி.அன்புமணவா ளன், ஜி.நாகராஜன், த. அன்பழகன், எஸ்.மதியழகன் துரை.நாராயணன், எஸ்.ஜனார்ததனன், டி.சலோமி, தென்றல் கருப்பையா, எல்.வடிவேல், வி.ரத்தினவேல், ஜி.பன்னீர்செல்வம், எஸ். மணிவண்ணன், பி.வீர முத்து, டி.லட்சாதிபதி, எம். ஆர்.சுப்பையா, கரு.ராம நாதன், நெருப்பு முரு கேஷ், கே.தங்கராஜ், ஆர். காமராஜ் உட்பட நூற்றுக் கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் தென்றல் கருப் பையா தலைமையில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ., மாவட்ட செயலாளர் எஸ். கவிவர்மன் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர். தோழர் செல்வராஜுக்கு சந்திரா என்ற மனைவி மற்றும் மூன்று பெண் குழந் தைகள் உள்ளனர்.
கே.பாலகிருஷ்ணன், சிவ.வீ.மெய்யநாதன் இரங்கல்
தோழர் செல்வராஜூவின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், தமிழக சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சிபிஎம் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி, சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன், மாநில செயற் குழு உறுப்பினர்கள் மதுக் கூர் ராமலிங்கம், எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், ஐ.வி.நாகராஜன், ஆர்.சிங்காரவேல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.