districts

img

சிபிஎம் வேட்பாளர் சம்சாத் பேகத்திற்கு ஆதரவாக அமைச்சர் ரகுபதி வாக்கு சேகரிப்பு

அறந்தாங்கி, பிப்.10-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு சம்சாத் பேகம் போட்டியிடுகிறார்.  இவருக்கு ஆதரவாக புதனன்று 24வது வார்டு பகுதியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பிரச்சாரம் செய்தார். அவ ருடன் திமுக நகரச் செயலாளர். இரா. ஆனந்த், முன்னாள் நகரச் செயலாளர் ராஜேந்திரன், வட்டச் செயலாளர் நாராய ணன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.சுப்பிரமணியன், கே.தங்கராஜ், நகர செயலாளர் கணேசன், பிரேம்குமார், மாணிக்கம், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கர்ணா, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் நாராயணமூர்த்தி, திமுக சீனிவாசன், வழக்கறிஞர்கள் அலாவுதீன், சேக்ராவுத்தர் மற்றும் மாதர் சங்கத்தினர் உள்பட நூற்றுக்கணக்கானோர் வாக்கு சேகரித்தனர்.

;