districts

img

பொன்னமராவதியை நகராட்சியாக மாற்ற முதல்வரிடம் மனு அளித்துள்ளேன்: அமைச்சர்

பொன்னமராவதி, நவ.2 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூ ராட்சி 10-வது வார்டில் பேரூராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சுந்தரி அழ கப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசினார்.  அப்போது அவர் கூறுகையில், “பொன்னம ராவதி பேரூராட்சி மக்கள் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு வளர்ச்சி பணி களை அரசு செய்து வருகிறது. பொன்னமராவதியை நகராட்சியாகவும், காரையூர், திருமயம் ஊராட்சி களை பேரூராட்சியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகளை மனுவாக முதல்வரிடம் அளித்துள்ளேன்.  குப்பைகளை தரம் பிரித்து, உரம் தயாரிப்ப தற்கான பணிகள் நடந்து வருகிறது. பொன்னமரா வதி பேரூராட்சி பகுதியில் மட்டும் 7 கோடியே 7 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடை பெற்று வருகின்றன. இங்கு 22 மனுக்கள் வரப்பட்டுள் ளன அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். வலையபட்டி மயானத்தில் தண்ணீர் வசதி, சுற்றுச்சுவர் இல்லை. அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது உட்பட பல கோரிக்கைகளை அமைச்சரிடம் மக்கள் தெரி வித்தனர்.