புதுக்கோட்டை, டிச.5- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி களிலும் திங்களன்று சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் திறம்பட தங்களது சைகை மொழியை வெளிப்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரி யர் பெ.பாண்டியன், பள்ளி மேலாண்மை குழுத்தலை வர் ராஜாத்தி மதியழகன், மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கான சிறப்பு ஆசிரியர் குளோரி, இயன்முறை மருத்துவர் செந்தில் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.