அறந்தாங்கி, பிப்.12 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி ஜெகதாப்பட்டினம் கிளை சார்பாக சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவேந்தல் நிகழ்ச்சி சிஐடியு சுமைதூக்கும் பணியாளர்கள் அலுவலகம் அருகில் நடை பெற்றது. சிங்காரவேலர் படத்திற்கு மாலை அணிவித்து நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் ஒன்றிய செயலா ளர் கரு.இராமநாதன், செல்லனேந்தல் கிளை உறுப்பினர் கள் கோவிந்தராஜ், லட்சுமி, மீனவர்கள் சங்க பொறுப்பாளர் செபஸ்தியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.