districts

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை மாதர் சங்கம் புகார்

புதுக்கோட்டை, ஏப்.7-  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  பல்வேறு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த சில நாட்க ளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  ஆய்வு குறித்து சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பி.சுசிலா, தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி ஆகியோர் தெரிவித்துள்ளதாவது: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு முடிவின்படி, புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு  மருத்துவனைகள், ஆரம்ப சுகாதார நிலையங் களில் ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வில் புற,  உள் நோயாளிகள், அவர்களோடு உடன் இருப் பவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணி யாளர்கள் என அனைத்துப் பகுதியினரையும் சந்தித்து விபரங்களை கேட்டறிந்தோம். பொதுவாக பெரும்பாலான அரசு மருத்துவ மனை வளாகங்கள் சுகாதாரமற்று இருப்பதாக பெரும்பகுதியினர் தெரிவிக்கின்றனர். ஒரு நோய்க்கு மருத்துவம் பார்க்க வந்தால் இன் னொரு நோய் தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்தில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.  குறிப்பாக கழிப்பறை மிகவும் சுகாதார மற்று உள்ளது. தண்ணீர் வசதிகூட பல மருத்துவ மனைகளில் இருப்பதில்லை. இதேபோல, குடி நீரையும் காசுகொடுத்து வாங்க வேண்டிய நிலையே உள்ளது. பல மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுப்  பொருட்கள் தரமாக இருப்பதில்லை.

இதனால், வெளியில் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலையே உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப  பல்வேறு மருத்துவமனைகளில் மருத்து வர்கள் இல்லை. இதனால், நோயாளிகள் மருத்துவரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. செவியலியர் பற்றாக்குறையால் நோயாளிகளை சரியான நேரத்திற்கு மருந்து, மாத்திரைகள் கொடுப்ப தற்கோ, ஊசி போடுவதற்கோ சிரமமாக  உள்ளது. இதுபோல, இதரப் பணியாளர் களும் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் இல்லாததால் நோயாளிகள் கடுமையான சிர மத்தை சந்தித்து வருகின்றனர். பெரும்பாலான தாலுகா மருத்துவமனைகளில் ஸ்கேன் வசதி  உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இருப்ப தில்லை. இதனால், சுலபமான சிகிச்சையில் குணமடைபவர்கள்கூட நீண்ட தொலைவில் உள்ள புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் மையமாகவே தாலுகா மருத்துவமனைகள் உள்ளன. இப்படி நோயாளிகளின் நிலை ஒருபுறம்  இருந்தாலும், மருத்துவர்களின் நிலையும் மோசமாகவே உள்ளது. போதிய மருத்து வர்கள் இல்லாததால் ஒருவரே இரண்டு மருத்து வர்களின் வேலையை செய்ய வேண்டிய நிலை  உள்ளது. செவிலியர்கள் மற்றும் பணியாளர் களின் நிலையும் இப்படித்தான் உள்ளது. கிராமப் புறங்களில் உள்ள பல ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு போதிய நேரத்தில் பேருந்து வசதி  இருப்பதில்லை. இருந்தாலும் மருத்துவ மனைகளுக்கு அருகில் பேருந்து நிறுத்தம் பல  இடங்களில் இல்லை.  பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் பேருந்து  வழித்தடத்தைத் தாண்டி உள்புறமாக தொலை வில் உள்ளது.

இதனால், ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு வந்துசெல்வதில் நோயாளிகளும் பணியாளர்களுக்கும் சிரமத்தை சந்திக்கின்ற னர். பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு  நேரக் காவலர்கள் இல்லாததால் அங்கு பணி யாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணி யாளர்கள் அனைவரும் அச்சத்துடனேயே தங்க வேண்டிய நிலை உள்ளது. இதையும் தாண்டி  சில மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுவ தாக நோயாளிகளும், பொதுமக்களும் தெரிவித் துள்ளனர்.  நாங்கள் நடத்திய ஆய்வின்போது சேகரித்த தகவல்களை மாவட்ட ஆட்சியருக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் விரைவில் அறிக்கையாக அனுப்பி வைப் போம்.  இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.