புதுக்கோட்டை, டிச. 23- புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (24). இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 வயது சிறுமியை கட்டா யப்படுத்தி பலமுறை பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். இதைத் தெரிந்து கொண்ட அச்சிறுமியின் பெரியப்பா முறையுள்ள பழனிச்சாமி (57) என்பவரும், சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலை யில் அச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள் ளது. இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நன்னடத்தை அலுவலர் சசி அளித்த புகாரின்பேரில், புதுக்கோட்டை நகர மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, இரு வரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் யோகமலர் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் நிறை வில் நீதிபதி ஆர்.சத்யா வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். முதல் குற்றவாளியான கோவிந்தராஜூ வுக்கு ஆயுள் சிறை மற்றும் ரூ.2 லட்சம் அப ராதம், இரண்டாவது குற்றவாளியான பழனிச் சாமிக்கு ஆயுள் சிறை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப் பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 2.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.