அறந்தாங்கி, ஜூன் 29 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் ஆவ ணத்தான் கோட்டை மேற்கு நடுநிலைப் பள்ளி யில் மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 248 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இம்மாணவர்களுக்கான பள்ளி நாட்குறிப்பு வழங் கும் நிகழ்ச்சி நடை பெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் ப. கலைச்செல்வி தலைமை வகித்தார். பின்னர் மாண வர்களுக்கு நாட்குறிப்பு வழங்கப்பட்டது. உடனடி யாக பள்ளி நாட்குறிப்பு எழுதும் செயல்பாடு தொ டங்கப்பட்டது. நிகழ்ச்சி யின் நிறைவாக பள்ளி யின் இடைநிலை ஆசிரி யர் சுமதி நன்றி கூறி னார்.