புதுக்கோட்டை, டிச. 4 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக எஸ்.சங்கர் தேர்வு செய்யப் பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு கீரனூரில் டிசம்பர் 3, 4 தேதிகளில் நடைபெற்றது. தோழர்கள் என். சங்கரய்யா, சீத்தா ராம் யெச்சூரி நினை வரங்கில் நடைபெற்ற இம்மாநாட்டில் புதனன்று பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
புதிய மாவட்டக்குழு தேர்வு
மாநாட்டில் 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக எஸ். சங்கர் தேர்வு செய்யப் பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக எம். சின்னத்துரை எம்எல்ஏ, எஸ். கவிவர்மன், ஏ. ராமை யன், கே. சண்முகம், ஏ. ஸ்ரீதர், ஜி. நாகராஜன், த. அன்பழ கன், சு. மதியழகன், துரை. நாராயணன், எஸ். ஜனார்த்த னன், கி. ஜெயபாலன், டி. சலோமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். வரவேற்புக்குழு செயலா ளர் எஸ். கலைச்செல்வன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
நிலத்தடி நீருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை உருவாக்கும் தைலமரக்காடுகளை அகற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீடு செய்து விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.