districts

img

எஸ்.களபம் அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவன் படுகாயம்

புதுக்கோட்டை, ஜூன் 20 - புதுக்கோட்ட மாவட்டம் எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து  விழுந்ததில் 4 ஆம் வகுப்பு மாணவன்  படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடி தாலுகாவுக்கு உட்பட்ட எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் 40 மாணவர்கள் படித்து வருகின்ற னர். இந்தப் பள்ளியில் சுமார் 40 ஆண்டு களுக்கும் முன்பாக கட்டப்பட்ட வகுப் பறை மோசமாக சிதிலமடைந்துள்ளது. கட்டிடம் மூன்று முறை பழுது பார்க்கப் பட்டுள்ளது. கடைசியாக 2018-19 கல்வி ஆண்டில் ரூபாய் ஒரு லட்சத்து 20  ஆயிரம் மதிப்பில் பழுது நீக்கும் பணி நடைபெற்றுள்ளது. ஆனாலும், கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை யில் இருந்ததால் அப்பள்ளியில் பணிபுரி யும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படு கிறது. இதனால், மாணவர்களை கட்டி டத்திற்கு வெளியே அமரவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர்.  இந்நிலையில், திங்கள்கிழமை சிதில மடைந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை எதிர்பாராதவிதமாக இடிந்து பயங்கர  சத்தத்துடன் விழுந்துள்ளது. அதி லிருந்து வெளியான கல் ஒன்று கட்ட டத்திற்கு அருகாமையில் அமர்ந்திருந்த  நான்காம் வகுப்பு மாணவன் பரத்தின் தலையில் பட்டு படுகாயமடைந்தார்.  ஆசிரியர்கள் மாணவனை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் மாணவன் பரத்  சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந் துள்ள மாணவன் பரத்துக்கு ஏற்கனவே இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரி விக்கையில், “அதிகாரிகளின் அலட்சிய போக்கே இதற்குக் காரணம். ஒவ்வொரு முறையும் கட்டடம் புதிதாக கேட்கும் போதும், புதுப்பிப்பு என்ற பெயரில் பெயிண்டை மட்டுமே அடித்து சென்றுள் ளனர். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப  அச்சமாக உள்ளது. புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்கவில்லை என்றால் தங்கள்  பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்” என்றனர்.