districts

img

வாழ்க்கைத்தரம் உயர்வு, சமூக மாற்றத்தை உள்ளடக்கிய வளர்ச்சி

புதுக்கோட்டை, ஜூன் 9-  தமிழக அரசைப் பொறுத்தவரை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வு, சமூக மாற்றத்தை உள்ள டக்கியதாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட விளை யாட்டரங்கில் புதனன்று மாலை நடை பெற்ற அரசு விழாவில், ரூ.81.31 கோடி மதிப்பில் நிறைவுற்ற 140 திட்டப் பணி களைத் தொடங்கி வைத்தும், ரூ.143.05 கோடி மதிப்பில் 1,397 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.379.30 கோடி மதிப்பில் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புதுக்கோட்டையில் இருந்து முதல் முறையாக அமைச்சராகியிருக்கும் மெய்யநாதன் எப்படி செயல்படப் போகி றாரோ என்ற தயக்கம் இருந்தது. ஆனால், தனது துறையின் மானியக் கோரிக்கையில் அவர் பதிலளித்த விதம் தேர்ந்த அமைச்சராக அவர்  உருவாகியிருக்கிறார் எனக் காட்டியி ருக்கிறது. அதேபோல, சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், அரசின் புதிய சட்டங்களை உருவாக்குவதிலும், நீதிமன்ற நிர்வாகத்தையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட் டத்தில் பெறப்பட்ட 7,463 மனுக்க ளில், 3,614 மனுக்களுக்கு தீர்வுகாணப் பட்டுள்ளது. இலவசப் பேருந்து பயணத்தில் 2 லட்சம் பெண்கள் பயனடைந்தி ருக்கிறார்கள். கூட்டுறவு வங்கிகளில் 170 பயனாளிகளின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

திருமயத்திலுள்ள அரசு மருத்துவ மனை ரூ.10 கோடி செலவில் கூடுதல்  படுக்கைகளுடன் தரம் உயர்த்தப் படும். கோட்டைப்பட்டினம், ஜெகதாப் பட்டினம் மீன்பிடி இறங்கு தளங்கள் தலா ரூ.15 கோடி செலவில் மேம்படுத் தப்படும். ஒரு தொழிற்சாலை அமைக்கப்படு கிறது என்றால் அதன் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம் உயர்வு, சமூக மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியை தமிழக அரசு மேற்கொள் ளும். விளிம்புநிலை மக்களுக்கு நன்மை செய்வது திராவிட மாடல் ஆட்சி.  ஏழை, எளியோர் எளிதில் அணுகும் அரசாக, விளிம்புநிலையில் வாழும் மக்களுக்கான அரசாக செயல்பட நினைக்கிறேன். இதனை வாக்கு வங்கி அரசியல் என கொச்சைப்படுத்துப வர்களும் இருக்கிறார்கள். இருள ருக்கும், குறவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கைக ளுக்கும் நல்லது செய்வது வாக்கு வங்கி அரசியலா? அவர்கள் வாக்கு வங்கியைக் கொண்டவர்களா? சாதாரண, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகத்தான் பாடுபடுகிறோம். தனது வாழ்நாளின் கடைசி நாள் வரை மூத்திரவாளியை சுமந்து கொண்டு மக்களுக்காகப் பாடுபட்ட பெரியாரின் வழியில் நடக்கிறோம். அண்ணா, கருணாநிதி வழியில் மக்களுக்கான அரசை நடத்துகிறோம். இங்கே நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பி னர்கள் பலரும் கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.

அந்தக் கோரிக்கைகளின் உண்மை, நியாயத்தை அறிந்து நிச்சயம் நிறைவேற்றுவோம்.  இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். விழாவில், மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், கேகேஎஸ்எஸ்ஆர். ராமச் சந்திரன், எஸ்.எஸ்.சிவசங்கர், கே.ஆர்.பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பி னர்கள் சு.திருநாவுக்கரசர், கார்த்தி ப. சிதம்பரம், செ. ஜாதிமணி, கே.நவாஸ் கனி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை, வை. முத்துராஜா, எஸ்.டி.ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி நன்றி கூறினார்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் முதல் தளத்தில் பார்வையாளர்கள் தங்குவதற்கான சிறப்புக் கட்டடம், புதுக்கோட்டை நகர் பகுதிகளில், 14 இடங்களில் உயர் மின் கோபுர விளக்குகள், வம்பன் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம், துணை சுகாதார நிலையங்கள், புதிய அங்கன் வாடி மையங்கள், பிள்ளைத்தண்ணீர் பந்தலில் கால்நடை மருந்தகக் கட்டடம், ஆதனக்கோட்டை, பேரனூரில் வேளாண்மை விரிவாக்க மையம், துலையனூர், கீழாத்தூர் ஆகிய இரண்டு புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கொடியாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், முத்துக்குடா கடற்கரையில் படகு சவாரி உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.