பொன்னமராவதி, ஜன.7 - நார்த்தாமலை அருகே துப்பாக்கி குண்டடிபட்டு இறந்த சிறுவன் புகழேந்தி யின் மரணத்திற்கு உயர்மட்ட நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். சிறுவனின் குடும் பத்திற்கு வழங்கப்பட்ட நிவா ரண உதவியை உயர்த்தி வழங்க வேண்டும். துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி பொன்னமராவதி யில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.பகுருதீன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் நல்லதம்பி, குமார், சாத்தையா, பாஸ்கர், சௌந்தரம், சௌந்தரரா ஜன், மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக சிறுவனின் படத் திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.